தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 133 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட, புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு மற்றும் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இடம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை, கிண்டி

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு பள்ளிக் குழந்தைகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி:

ஊட்டியை அடுத்த எல்லநள்ளி பகுதியில் இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அகற்றினர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:

பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே போக்குவரத்து நெரிசல்!

வேலூர்:

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில்,
வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த்.

கடலூர் என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணி இரண்டாவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர், சேத்தியாதோப்பு அருகே நடைபெற்றது.
ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் முத்துசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரைக் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி:

குன்னூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிக்கான லோகோவை அறிமுகம் செய்தனர்.

மதுரை:

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் பாதயாத்திரை நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

திருநெல்வேலி:

மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சென்னை:

ஸ்டெர்லைட்-வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழ்நாடு வருகை தொடர்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் மற்றும் மேம்பாலம் இணைப்பு சாலை அமைப்பது குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வுசெய்தார்.
நாகர்கோவில்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி சுசீந்திரத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த இருவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழங்கினார்.
புதுச்சேரி நகரப் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட, இரண்டு பேரை ரெட்டியார்பாளையம் போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை:

பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே போக்குவரத்து நெரிசல்!

திருநெல்வேலி:

அரியநாயகி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும்,பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரியும் பாதகை அணிந்து மாநகராட்சி கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்.

புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் இன்று மாநிலக் கழக நிர்வாகிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

தற்காப்பு, யோகா கலையில் இரண்டு உலக சாதனைகளைப் படைத்த மாணவர்கள் ஜென்ஸ்கர், யோஜென் ஆகியோரை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்.

வேலூர்:

சி.ஐ.டி.யு சார்பில் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தக் கோரிகையை நிறைவேற்றக் கோரி, வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி:

குன்னூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்தனர்.

தேனி:

மணிப்பூர் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்:

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்:

தேசிய கல்விக்கொள்கை மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சிறப்பு கல்வித் திட்டச் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ராமேஸ்வரம்:

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

சேலத்தில் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு 30 வருடங்களுக்கு மேலாகப் பட்டா வழங்காததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக தென்னை மற்றும் பனை மரத்தில் கள் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டி சேலத்தில் ஆர்ப்பாட்டம்.

from Tamilnadu News https://ift.tt/Sgdf28c