நீலகிரி : மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், கொடநாடு வழக்கை வரும் செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஶ்ரீதரன் உத்தரவிட்டார்.
இராமேஸ்வரத்தில் பாஜகவின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நிகழ்வுக்கு வருகை தந்த ஹெச்.ராஜா ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை: மேயர் ஆர்.பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவங்கி வைத்தார்
சென்னையில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
சிவகங்கை: ஆடி மாதம் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருநெல்வேலி: சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறத்துறை முலம் கடன் உதவி தொகையினை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
திருநெல்வேலி; பாளையஞ் செட்டிகுளம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப முகாமினை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
சேலம்: சென்னையில் நடைபெற உள்ள ஏழாவது ஹீரோ ஆசிய சாம்பியன் போட்டிக்கான கோப்பை கன்னியாகுமரி முதல் சென்னை வரை என்ற பயணத்தில் இன்று சேலம் வந்தடைந்தது. அதனை சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்
சேலம் மேச்சேரி பத்திரகாளியம்மன்
தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஈரோட்டில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நாகர்கோவில்: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி; காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் நடைபெற்ற விடுதி தின விழாவில் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நாகர்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
நாகர்கோவிலி்ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இராமேஸ்வரத்தில் பாஜகவின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நிகழ்வுக்கு கட்டப்பட்டுள்ள வாழை மர தோரணங்கள்.
புதுச்சேரி கடற்கரை பகுதியில் புகையிலைகளுக்கு தடை விதித்து வைக்கப்பட்ட எச்சரிக்கை பேனரை சீனியர் எஸ்.பி சைத்தன்யா திறந்து வைத்தார்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வருவதை முன்னிட்டு கடலுக்குள் பேனர் வைத்து அசத்திய தொண்டர்
சென்னை; மேயர் ஆர்.பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வித்துறையில் காத்திருப்போர் பட்டியலில்
உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஆசிரியர்கள்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்குகிறார். அதன் தொடக்க விழாவில் அமித் ஷா.
என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக பா.ம.க நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது நெய்வேலி.

from Tamilnadu News https://ift.tt/klJYDyx