செந்தில் பாலாஜி: அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, அமலாக்கத்துறையினர் தன்னுடைய கணவரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாகவும், அவரை உடனடியாக அதிலிருந்து விடுவிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுமீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்டவற்றை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
———–
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: `Four Bypass Grafts Were Placed!’ – மருத்துவ அறிக்கை சொல்வதென்ன?
கிசுகிசு: மெர்சல் புள்ளியின் மோதல் பின்னணி!

‘விட்டால் போதும்’ என்கிற மனநிலையில் விடைபெற நினைத்தார் கோட்டையின் உச்ச அதிகாரி. ஆனாலும், உச்ச அதிகாரியை முதன்மையானவர் விட்டுக்கொடுப்பதாக இல்லையாம். ஓய்வு பெற்றாலும் தனக்கு அருகிலேயே அவர் இருக்கும்விதமாக அரசு ஆலோசகர் பதவியை மறுபடியும் உருவாக்க உத்தரவிட்டிருக்கிறாராம்.
உச்ச அதிகாரி விடைபெற்றால் நினைத்தபடி விளையாடலாம் என நினைத்த கோட்டையின் மற்ற அதிகாரிகள் இப்போது கிலியடித்துக் கிடக்கிறார்கள்.
– இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் கிசுகிசு பகுதியில் மேலும்…
“ஆளுங்கட்சியின் வாரிசுக்கும், மெர்சலான புள்ளிக்குமிடையேயான தனிப்பட்ட மோதல், அரசியலாகவும் மாறியிருக்கிறது.” – இது தொடர்பான பின்னணி தகவல்களுடன்,
நிலைகுலைந்து போன காக்கி அதிகாரி,
எச்சரித்த முதன்மையானவர்… என அரசியல், அதிகார வட்டாரங்களின் சீக்ரெட் தகவல்களைத் தருகிறார் கணியன் பூங்குன்றன்.
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
இரவில் ‘பெண்கள் பாதுகாப்பு’க்கு புதிய திட்டம் அறிமுகம்!

‘பெண் சுதந்திரம்’ என என்னதான் பேசிக்கொண்டாலும், இன்றளவும் இரவு நேரங்களில் பெண்கள் தயக்கத்தோடு, பயத்தோடுதான் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறை புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
‘உளவுப்பிரிவில் வேலை’ என ரூ.40 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி கைது!

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. 40 வயதான இவர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்து நிம்மதியாக வாழலாம் என நினைத்தவருக்கு மோசடி நபரான செங்கோட்டை பாலகிருஷ்ணன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
இந்த மோசடி குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க….
நிதி தேவையை நிறைவேற்ற உதவும் 3 உத்திகள்!

ஒருவரின் வாழ்க்கையில் நிறைய நிதி இலக்குகள் இருக்கும். இந்த நிதி இலக்குகளை முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் முதலீட்டுக் கால பிரமிடாக வடிவமைக்கலாம்.
இந்த பிரமிடில் 1. குறுகிய கால முதலீடு, 2. நடுத்தர கால முதலீடு, 3. நீண்ட கால முதலீடு ஆகியவை இடம் பெறும் எனச் சொல்லும் நிதி ஆலோசகர் ஹசன் அலி, அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்
மகாராஷ்ட்ரா: வெளியான ஆட்சிக் கவிழ்ப்பு ரகசியம்!

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. இதனையொட்டி, ஜூன் 20-ம் தேதியை ( நேற்று ) உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ‘துரோகிகள்’ தினமாகக் கடைப்பிடித்தன.
இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பின்போது முக்கிய பங்கு வகித்த பா.ஜ.க அமைச்சர் ரவீந்திர சவான், சூரத்துக்கு எம்.எல்.ஏ-க்களை அழைத்துச் சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…
யோகாவின் அளவற்ற பலன்கள்! | Visual Story

கால், கையை நீட்டி மடக்குவதே சிரமமாக இருக்கிறது, இதில் எங்கிருந்து யோகா செய்வது எனப் புலம்புபவர்கள் பலர்.
ஆனா, யோகா செய்வதால் உளவியல் மற்றும் உடல் ரீதியாகக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவில்லாதவை.
யோகாவின் அளவற்ற பலன்களை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
—–
கர்ப்பம் அறிய உமிழ்நீர் பரிசோதனை…இங்கிலாந்தில் அறிமுகம்!
விஜய்: அரசியல் என்ட்ரி, Rolex vs Leo சண்டை? வைரலாகும் பாடல் குறியீடுகள்!

நடிகர் விஜய்தான் தற்போது திரை வட்டாரத்தில் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். கடந்த வாரம், அவர் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த விழா பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த அலை ஓய்வதற்குள் ‘லியோ’ படத்தின் `நா ரெடி தா வரவா…’ பாடல் புரொமோ யூடியூப்பில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
——–
மிஸ்டர் மியாவ்: ‘மாமன்னன்’- கட்சி சீனியர்களின் கவலை
from Tamilnadu News https://ift.tt/Ke53iYU
